மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கை- இந்திய பொது கல்வி முறை மீதான படுகொலை: சோனியா காந்தி
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் புதிய கல்வி கொள்கையானது இந்திய பொது கல்வி முறை மீதான படுகொலை என மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் புதிய கல்வி கொள்கையானது அதிகாரக் குவிப்பு, மதவாத திணிப்பு மற்றும் தனியார்மயமாக்குவது என்பதை அடிப்படையாக கொண்டிருப்பதாகவும் சோனியா காந்தி விளாசியுள்ளார்.
தி இந்து நாளேட்டில் புதிய கல்வி கொள்கை தொடர்பாக சோனியா காந்தி எழுதிய கட்டுரையில் இடம் பெற்றிருப்பதாவது: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையானது 3 முக்கிய திட்டங்களைக் கொண்டது. "Centralisation of power, Commercialisation, Communalisation" என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கை. மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து மத்தியில் குவித்து வைப்பது, மதவாத கருத்துகளை திணிப்பது, கல்வித் துறையில் தனியாரை களமிறக்குவதாகவே மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கை இருக்கிறது.

மத்திய அரசு நிதி உதவி நிறுத்தம்
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் SSA திட்டத்தின் கீழ் மாநிலங்கள் பல ஆண்டுகளாக நிதி உதவி பெற்று வந்தன. ஆனால் தற்போது பிஎம்ஶ்ரீ திட்டத்தை செயல்படுத்தவில்லை என கூறி மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கக் கூடிய நிதி உதவியை நிறுத்தி வைத்திருக்கிறது. இத்தனைக்கும் நாடாளுமன்ற நிலைக்குழுவும் கூட SSA திட்டத்துக்கான நிதியை எந்த நிபந்தனையுமே இல்லாமல் உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இருக்கிறது.
உயர் கல்வியிலும் மாநில அரசின் அதிகாரம் பறிப்பு
இதேபோல உயர்கல்வித் துறையிலும் மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில், மாநிலத்தின் பங்களிப்பையே இல்லாமல் செய்திருக்கிறது யுஜிசியின் வரைவு அறிக்கை. மாநிலங்களின் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை ஆளுநர்களே தன்னிச்சையாக நியமிக்கலாம் என்ற இந்த யுஜிசியின் வரைவு அறிக்கையானது உண்மையிலேயே கூட்டாட்சி தத்துவத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகும்.
அரசு பள்ளிகள் மூடல்
புதிய கல்விக் கொள்கையானது, அனைவருக்குமான கல்வி உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதுடன் கல்வித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கக் கூடியதாக இருக்கிறது. இதனால் 2014-ம் ஆண்டு முதல் சுமார் 90,000 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் தனியார் பள்ளிகள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருக்கின்றன.
பாடப் புத்தகங்களில் மாற்றம்
மேலும் மத்திய பாஜக அரசானது, கல்வியிலும் வெறுப்பரசியலை திணிக்கிறது. NCERT பாடப் புத்தகங்களில் இருந்து மகாத்மா காந்தி படுகொலையை நீக்கியது, முகலாயர்கள் வரலாற்றை நீக்கியது உள்ளிட்டவைகளைக் குறிப்பிடலாம்.
கல்வி முறை மீதான படுகொலை முடிவுக்கு வர வேண்டும்
கல்வி நிறுவனங்களில் நியமனங்கள் என்பதே ஒரு சித்தாந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதுதான் இதற்கு காரணமாகும். கல்வி முறையில் மாநில அரசுகளை ஒதுக்குகிற போக்கும் மிக ஆபத்தானது. மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைகள், இந்திய பொதுக் கல்வி முறை மீதான அப்பட்டமான படுகொலையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி எழுதியுள்ளார்.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications