'விஜயதசமி' நல்ல நாள் பார்த்து, தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!
விஜயதசமி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கலுக்கு புதிய ஆளுநர் நியமனம்செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி: விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியக்கப்பட்டுள்ளனர்.
நவராத்திரி விழாவின் இறுதிநாள் விழாவாக விஜயதசமி இன்று கொண்டாடபப்ட்டு வரும் நிலையில் தமிழகத்தில் 13 மாதங்களாக பொறுப்பு ஆளுநராக பதவி வகித்த வித்யாசாகர் ராவுக்கு பதிலாக பன்சாரிலால் புரோஹித் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல மாதங்களாக திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தமிழகத்துக்கு முழுநேர ஆளுநர் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் விளைவாக தற்போது பன்சாரி லால் புரோஹித் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் மட்டுமில்லாது, மேகாலய மாநிலத்துக்கு கங்கா பிரசாத்தும் அருணாச்சல பிரதேசத்துக்கு பி.டி. மிஸ்ராவும் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பீகாருக்கு சத்யபால் மாலிக், அஸ்ஸாமுக்கு ஜகதீஷ் முஷ்கி ஆகியோர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பீகாரும் தமிழ்நாடும் பெரிய மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயதசமி அன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார். இந்துக்களுக்கு விஜயதசமி பண்டிகை என்பது வெற்றிக்குரிய, வெற்றியை ஈட்டுதலுக்குரிய நாள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications