பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.07 உயர்வு; டீசல் லிட்டருக்கு ரூ.1.90 உயர்வு !
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.07 உயர்த்தப்பட்டுள்ளன. டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.90 உயர்ந்துள்ளன. இந்த புதிய விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றியமைத்து வருகின்றன.

அந்த வகையில், இன்று பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டன.
இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 3.07 -ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 1.90 -ம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 59.13 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.49.09 ஆகவும் விற்பனை செய்யப்படும்.












Click it and Unblock the Notifications