மோடி தலைமையில் முதல்வர்கள் மாநாடு: ஓ.பி.எஸ். பங்கேற்பு - மம்தா, உமர், ரங்கசாமி "ஆப்சென்ட்"!
டெல்லி: திட்ட கமிஷனுக்குப் பதில் புதிய அமைப்பை உருவாக்குவது குறித்து ஆலோசனை செய்யும் முதல்வர்கள் மாநாடு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அவரது இல்லத்தில் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் திட்ட கமிஷனுக்கு பதிலாக புதிய அமைப்பு உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இம்மாநாட்டில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு பதில் தலா ஒரு பிரதிநிதி பங்கேற்றனர். இதேபோல், புதுவை முதல்வர் ரங்கசாமியும் இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இம்மாநாட்டில் பங்கேற்றார். மத்திய அரசின் நேரடி மானியக் கொள்கையில் மாற்றம் தேவை என அப்போது அவர் வலியுறுத்தினார்.