தானேவில் புது மணப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மைத்துனர்: வாயில் ரசாயனம் ஊற்றி கொல்ல முயற்சி

Subscribe to Oneindia Tamil

தானே: மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக திருமணம் நடந்த 19 வயது பெண் கணவரின் சகோதரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டியைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும் ரபீக் ரஹ்மான் ஷேக் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அவரை அவரது கணவர், மாமனார் ரஹ்மான் ஷேக், மைத்துனர் ஹஸன் ரஹ்மான் ஷேக், அவரின் மனைவி கௌசியா மற்றும் நாத்தனார் நசீம் இஸ்தியாக் ஆகியோர் கொடுமைபடுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி அந்த பெண்ணை மைத்துனர் ஹஸன் ரஹ்மான் ஷேக் பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பிறகு அவரை ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தார்கள். மேலும் அவரது வாயில் விஷத்தன்மை உள்ள ரசாயனத்தை ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஹ்மான் ஷேக், அவரின் மகன் ஹஸன், கௌசியா, நசீம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அந்த பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தனது மனைவியை சகோதரன் பலாத்காரம் செய்ய கணவனே அனுமதித்த விவகாரம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+