மோடியை ரகசியமாக சந்தித்தாரா பவார்? தேர்தலுக்குப் பின் பாஜக கூட்டணியில் சேர திட்டமா?

இந்த சந்திப்பின்போது லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் வந்து இணைந்து கொள்வதாக பவார் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மராத்தி நாளிதழ் லோக்சத்தா செய்தி வெளியிட்டுள்ளது. அதில், காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடனான உறவை முறித்துக் கொள்ள பவார் தயாராகி விட்டார். மோடிக்கு ஆதரவாக அவர் திரும்பியுள்ளார்.
டெல்லியில் ஜனவரி 17ம் தேதி இருவரும் ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளனர். புதிய கூட்டணி தொடர்பாக விவாதித்துள்ளனர். தேர்தல் முடிந்த பின்னர் பாஜக கூட்டணிக்குத் தான் வருவதாக அப்போது மோடியிடம் பவார் தெரிவித்ததாக தெரிகிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த செய்தியை தேசியவாத காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. கடந்த ஓராண்டில் நான் மோடியை சந்தித்தே இல்லை என்று பவார் கூறியுள்ளார்.
ஆனால் தேர்தலுக்குப் பின்னர் பவார் அணி மாறுவது உறுதி என்று லோக்சத்தா அடித்துக் கூறுகிறது.
ஏற்கனவே பவாரின் வலதுகரமும், மத்திய அமைச்சருமான பிரபுல் படேல், குஜராத் கலவர விவகாரத்தில் மோடியை ஆதரித்துக் கருத்து தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications