For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சக மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி... உ.பி.யில்!

Google Oneindia Tamil News

கிரேட்டர் நொய்டா: உத்திரப்பிரதேசத்தில் சக மாணவர்களால் 9ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் டங்காவூர் நகரில், 9ம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று மார்க்கெட்டிற்கு சென்றிருந்தார். அப்போது மாணவி படிக்கும் அதே பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் இரண்டு பேர், அந்த மாணவியை சந்தித்துள்ளனர்.

Ninth standard student gang-raped in Uttar Pradesh

நைசாகப் பேசி தங்களது அறைக்கு அழைத்துப் போன மாணவர்கள், அங்கு அவரைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மாணவியை மீட்டுள்ளனர்.

அக்கம்பக்கத்தார் வருவதைக் கண்ட இரண்டு மாணவர்களும் தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மாணவர்களைத் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் உத்திரப்பிரதேச பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A minor girl was gang-raped Saturday in a village in Uttar Pradesh, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X