11 ஆயிரம் கோடியைவிட அதிகமாக மோசடி நடந்து இருக்கிறது.. நீரவ் மோடி குறித்து சிபிஐ திடுக்
நீரவ் மோடி ரூ11,360 கோடியை விட அதிக மோசடி செய்துள்ளார் என்று சிபிஐ புதிய தகவல் தெரிவித்து இருக்கிறது.
Recommended Video

டெல்லி: நீரவ் மோடி ரூ11,360 கோடியை விட அதிக மோசடி செய்துள்ளார் என்று சிபிஐ புதிய தகவல் தெரிவித்து இருக்கிறது. இதன் மதிப்பு இன்னும் கூட உயரலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
இதில் பல்வேறு இடங்களில் பல்வேறு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது.

பறிமுதல்
இதில் தொடக்கத்தில் நீரவ் மோடியின் நிறுவனங்கள், வீடுகள் உட்பட 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதன்மூலம் ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவரிடம் 23 அசையா சொத்துக்கள் பல்வேறு இடங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் தங்கம், வைரம் உள்ளிட்ட பொருட்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

அடுத்த கட்டம்
அடுத்தக்கட்டமாக அவருக்கு சொந்தமாக மும்பையில் இருக்கும் 6 கடல் பார்த்த வீடுகளும், 3 தனி வீடுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்க்கு சொந்தமான 9 சொகுசு கார்கள். பல்லாயிரம் மதிப்புள்ள வாட்ச்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதிய செய்தி
தற்போது நீரவ் மோடி இன்னும் கூட அதிகமாக மோசடி செய்து இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சரியான கணக்கு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் 2000-3000 கோடி வரை இன்னும் மோசடி மதிப்பு அதிகமாகும் என்று சிபிஐ கணக்கு தெரிவித்துள்ளது.

எதனால்
ஆரம்ப புள்ளி விவரங்கள் தவறாக இருப்பதால் மோசடி தொகை குறைவாக கணக்கிடப்பட்டு இருக்கிறது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதால் புதிய தொகை விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதே சமயம் இன்னும் மீதம் இருக்கும் சொத்துக்களை கணக்கிடும் போது, இன்னும் மோசடி தொகை அதிகம் ஆகும்.












Click it and Unblock the Notifications