நிதாரி கொலை வழக்கு.. இளம் பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற காமுகர்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி அருகே நொய்டாவில் 2005-06ல் தொடர் கொலைகளில் இருவரும் ஈடுபட்டனர். 11 பெண்கள் உட்பட 16 பேர் கொடூரமாக கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டனர். பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்வது இவர்கள் வாடிக்கை.
காசியாபாத் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 16 வழக்குகளில் ஒன்றான பலாத்கார முயற்சி, கொலை, சாட்சியங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் இன்று இவ்விருவருக்கும் ரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 7 வழக்குகளில் இவ்விருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைகள் அரிதினும் அரிதானவை என்ற வாதத்தின்கீழ் வருபவை என்பதால் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக நீதிபதி பவன்குமார் திவாரி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications