பாஜக - நிதிஷ்குமார் கூட்டுச்சதியால் பழிவாங்கப்பட்ட லாலு பிரசாத்: லாலு மகன் தேஜஸ்வி யாதவ்
பாஜக - பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூட்டுச்சதிக்கு லாலு பிரசாத் பழிவாங்கப்பட்டு உள்ளார் என்று அவரது மகன் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாட்னா : பாஜக மற்றும் நிதிஷ்குமாரின் கூட்டுச் சதிக்கு தனது தந்தை லாலுபிரசாத் யாதவ் பழிவாங்கப்பட்டு இருக்கிறார் என்று அவரது மகனும், பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
கால்நடை தீவனம் வாங்கியது தொடர்பான ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்ற பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலுபிரசாத் யாதவ்விற்கு சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 4-வது ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை லாலுவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது ராஷ்டிரீய ஜனதா தளக் கட்சியின் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
லாலுவின் மகனும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய தேஜஸ்வி யாதவ் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், பாஜக மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கூட்டுச்சதியால் லாலுபிரசாத் பழிவாங்கப்பட்டுள்ளார்; சிறையில் லாலுவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் லாலுவின் உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லை. அப்படி இருப்பதாக கருதினால், அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். பாஜக அதை எந்த விதத்திலும் தடுக்காது என்று துணை முதல்வர் சுசில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ள நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக ராஞ்சி மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் லாலுபிரசாத் யாதவை பாஜகவின் மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹாவும், காங்கிரஸ் தலைவர் சுபோத்கான் சகாயும் நேரில் சந்தித்துப் பேசினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications