ஆண்மை சோதனையால் அதிர்ச்சி! பிடதியில் இருந்து திருவண்ணாமலைக்கு ஷிப்ட் ஆகிறார் நித்தியானந்தா!!
பெங்களூர்: நித்தியானந்தா தனது ஆசிரமத்தை பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளார். ஆண்மை சோதனை நடத்துவதாக கூறி கர்நாடக சிஐடி போலீசாரால் அடைந்த அவமானத்தால் நித்தியானந்தா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாதுகாப்பு காரணங்களும் இதில் உள்ளதாக தெரிகிறது.

பெங்களூர் அடுத்த ஆசிரமம்
பெங்களூர்-மைசூர் சாலையில் உள்ள பிடதி நகருக்கு வெளியே, மதிப்பு மிக்க இடத்தில் நித்தியானந்தா ஆசிரமம் அமைந்துள்ளது. இது மொத்தம் 22 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. கட்டிடங்கள் சில ஏக்கரில் மட்டுமே அமைந்துள்ள நிலையில், பிற பகுதி மைதானம் போல பரந்து விரிந்து காணப்படும்.

தலைமை ஆசிரமம்
நித்தியானந்தா சாமியாருக்கு பல இடங்களில் ஆசிரமம் இருந்தாலும், பிடதி ஆசிரமத்தையே அவர் தலைமை ஆசிரமமாக அறிவித்துள்ளார். குருபூர்ணிமா உட்பட பெரும்பாலான முக்கிய நிகழ்வுகள் பிடதி ஆசிரமத்தில்தான் நிகழ்த்தப்படும்.

நித்தியானந்தாவுக்கு சிரமங்கள்
இந்நிலையில்தான் பாலியல் மோசடி புகார்களால் சிக்குண்டு பெரும் சிரமங்களுக்கு நித்தியானந்தா ஆளானார். சற்று காலம் அவரது வாழ்க்கையில் புயல் ஓய்ந்திருந்த நிலையில், தற்போது ஆண்மை சோதனை என்ற பெயரில் மீண்டும் சூறாவளி சுழன்று அடிக்க தொடங்கியுள்ளது.

ஆண்மை சோதனை
நித்தியானந்தா மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் கர்நாடக சிஐடி போலீசார், நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கோர்ட் அனுமதியை பெற்று, நேற்று நாள் முழுவதும் பரிசோதனையும் நடந்து முடிந்தது. சாமியாரான தன்னிடம் ஆண்மை சோதனை நடத்தியது மன வருத்தத்தை தந்துள்ளதாக நெருக்கமான சிஷ்யர்களிடம் நித்தியானந்தா கூறிவருகிறாராம்.

திருவண்ணாமலைக்கு பயணம்
இந்நிலையில், பிடதி ஆசிரமத்தில் இன்று காலை சிஷ்யர்கள் மத்தியில் உரையாற்றிய (பிரவச்சனா) சுவாமி நித்தியானந்தா, திருவண்ணாமலையிலுள்ள ஆசிரமத்திற்கு இடம் பெயரப்போவதாக அறிவித்தார். இனிமேல் திருவண்ணாமலையில் இருந்தபடியே 'பிரவச்சனா' செய்ய போவதாகவும் அவர் கூறினார். அதே நேரம் பிடதி ஆசிரமத்தில் உள்ள சிஷ்யர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இதை நேரடியாக காண ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

கன்னட அமைப்புகள் கொண்டாட்டம்
பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, தமிழகத்தை சேர்ந்த நித்தியானந்தா, கர்நாடகாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று கன்னட அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வந்தன. நித்தியானந்தாவின் அறிவிப்பை கன்னட அமைப்புகள் கொண்டாடி வருகின்றன. நித்தியானந்தா திருவண்ணாமலைக்கு இடம் பெயர்ந்தாலும், பிடதி ஆசிரமத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிகிறது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications