நிதின் கட்கரிக்கு கூடுதல் பொறுப்பு... மறைந்த முண்டேவின் துறை ஒதுக்கப்பட்டது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் துறையும் கூடுதலாக நிதின் கட்கரி வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடித்து மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி நரேந்திர மோடி தலைமையில் 46 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை பதவி ஏற்றுக் கொண்டது.

நிதின் கட்கரிக்கு சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலை, கப்பல் துறையும், கோபிநாத் முண்டேவுக்கு ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் ஆகிய துறைகளும் ஒதுக்கப் பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த சாலை விபத்தில் மத்திய அமைச்சர் முண்டே பலியானார். அதனைத் தொடர்ந்து அவரது துறையும் நிதின் கட்கரி வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications