"அதிகரிக்கும் சர்வாதிகாரம்.. சீக்கிரமே உலக போர் வெடிக்கும்!" ஓப்பானாக உடைத்து பேசிய நிதின் கட்கரி
டெல்லி: உலகம் முழுவதும் மோதல் போக்கு நிலவுவதாகவும், எந்த நேரத்திலும் உலகப் போர் வெடிக்க வாய்ப்புள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். உலகெங்கும் சர்வாதிகாரம் அதிகரித்து வருவதால் உலகம் அழிவை நோக்கி மெதுவாகச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இதனால் அப்பாவி மக்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்போது உலகின் பல்வேறு பகுதிகளிலும் போர்ச் சூழல் நிலவி வருகிறது. மத்தியக் கிழக்கில் போர் முடிந்தாலும் அமைதி முழுமையாகத் திரும்பவில்லை.. ரஷ்யா உக்ரைன் மோதல் தொடர்கிறது, சீனா தைவான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதுபோல சர்வதேச அளவில் பதற்றம் நிலவுவதால் அது பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிப்பதாகவே இருக்கிறது.

உலகப் போர்
நிலைமை கைமீறிச் சென்றால் உலகப் போர் வெடிக்கும் ஆபத்து இருப்பதாகவும் பல்வேறு வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்தே வருகிறார்கள். இதற்கிடையே மத்தியச் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நிதின் கட்கரி இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், "இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயும், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயும் மோதல் நடந்து வருகிறது. உலகில் இதுபோல பதற்றமான சூழல் நிலவுவதால் உலகப் போர் கூட வெடிக்க வாய்ப்புள்ளது.
சர்வாதிகாரம்
வல்லரசு நாடுகளின் சர்வாதிகாரம் காரணமாக உலகில் ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அன்பு மறைந்து வருகிறது. உலகம் முழுவதும் மோதல் போக்கு நிலவி வருகிறது" என்றார். உண்மை, அகிம்சை மற்றும் அமைதி ஆகியவற்றை உலகிற்குச் சொல்லித் தரும் புத்தரின் பூமியாக இந்தியா இருப்பாகப் புகழ்ந்த கட்கரி, இப்போதுள்ள சர்வதேச சூழலை ஆய்வு செய்து எதிர்காலத்திற்கு ஏற்ப சரியான கொள்கைகள் முடிவு செய்யப்படும் என்றார்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் மற்றும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், உலகம் முழுவதும் மோதல் சூழ்நிலை நிலவுகிறது. இந்த இரண்டு போர்களின் பின்னணியில் எந்த நேரத்திலும் உலகப் போர் நடக்க வாய்ப்புள்ள சூழ்நிலை உள்ளது. ஏவுகணைகள் மற்றும் டிரோன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மேம்பட்ட தொழில்நுட்பத்தால் போர் முறைகள் மாறிவிட்டன.
மனிதக்குலத்தைப் பாதுகாப்பது கடினம்
இவை அனைத்திற்கும் மத்தியில், மனிதக்குலத்தைப் பாதுகாப்பது கடினமாகிவிட்டது. பெரும்பாலும் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன. இது ஒரு கடுமையான பிரச்சனையை உருவாக்கியுள்ளது. இவை அனைத்தும் சர்வதேச அளவில் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனையாகவே இருக்கிறது.
உலகளாவிய மோதல்கள் மெதுவாக உலகை அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன. சர்வாதிகாரம் காரணமாகவே உலகம் அழிவை நோக்கி செல்கிறது. உண்மை என்னவென்றால் இவை அனைத்தும் மெதுவாக அழிவுக்கு வழிவகுக்கிறது. வல்லரசுகளின் சர்வாதிகாரம் அன்பை மறையச் செய்கிறது" என்றார்.
வல்லுநர்கள்
சர்வதேச வல்லுநர்கள் பலரும் உலகில் போர்ச் சூழல் அதிகரித்து வருவதாகவே கூறி வருகிறார்கள். ரஷ்ய அதிபர் புதின் தொடங்கி பலரும் கூட எப்போது வேண்டுமானாலும் உலகப் போர் வெடிக்கும் ஆபத்து இருப்பதாகவே சொல்லி வருகிறார்கள். ஏற்கனவே இரு உலகப் போர்களில் பூமி மிக மோசமான பேரழிவைச் சந்தித்துள்ளதால் மீண்டும் ஒரு உலகப் போர் வந்தால் அது உலக அழிவின் தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications