வரதட்சணை வழக்கில் நீதிபதி உத்தரவில்லாமல் கைது செய்யக் கூடாது: உச்சநீதிமன்றம்
டெல்லி: வரதட்சணை வழக்கில் நீதிபதி உத்தரவில்லாமல் கைது செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
வரதட்சணை வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து:

பெண்களில் பெரும்பாலானோர் வரதட்சணைக்கு எதிரான சட்டத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இனி இம்மாதிரியான புகாரின் பேரில் நீதிபதிகளின் உத்தரவில்லாமல் யாரையும் கைது செய்யக்கூடாது.
தங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக கணவரையும், கணவரது உறவினர்களையும் கைது செய்ய வைப்பதற்காக வரதட்சணைக்கு எதிரான இந்திய தண்டனை சட்டம் 498ஏ.வை பெண்கள் பயன்படுத்தி வருவது மிகவும் அதிகமாகிவிட்டது.
இப்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் விசாரணைக்கு பின் ஏராளமானோர் விடுதலை ஆகி வருவது பெண்களின் கருத்து பொய்யனாது என்பதை நிரூபித்துள்ளது.
இது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளோம். சட்டப்பிரிவு 498ஏ.வின் படி எவரையும் காவல்துறை கைது செய்யக்கூடாது என அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications