ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி
மும்பை: மும்பையில் ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுவினை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தனது மகள் ஷீனாபோராவை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார் இந்திராணி முகர்ஜி. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கில் இந்திராணியின் 2வது கணவர் சஞ்சீவ் கன்னா, உதவியாக இருந்த கார் டிரைவர் சாம்ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் 3வது கணவர் பீட்டர் முகர்ஜியும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் இருக்கும் தனக்கு ஜாமீன் வழங்குமாறு இந்திராணி முகர்ஜி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், "நான் ரத்தஓட்டம் சம்பந்தபட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளேன். இதன் விளைவாக தனது மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் சப்ளை தடைபட்டு பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் தற்போது அடைக்கப்பட்டுள்ள பைகுல்லா பெண்கள் சிறைச்சாலையில் இருந்து தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சுமார் 45 முதல் 60 நிமிடங்கள் வரை ஆகிறது. இது தனது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்" என இந்திராணி முகர்ஜி கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வழங்கியுள்ளார். மேலும் ஒவ்வொரு காலாண்டிலும் டாக்டர் குழு அவரின் உடல்நிலை குறித்த அறிக்கையை சேகரித்து கோர்ட்டுக்கு நேரடியாக அனுப்பிவைக்கவேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications