நம்பிக்கை இல்லா தீர்மானம்... யாருக்கும் ஆதரவு இல்லை- மவுனம் கலைத்தது சிவசேனா!
Recommended Video
டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கப் போவதும் இல்லை; எதிர்க்கப் போவதும் இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளது சிவசேனா.
தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவை மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதில் மும்முரமாக உள்ளன. ஆனால் இத்தீர்மானத்தை லோக்சபா சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை.
இதனிடையே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பது குறித்து பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கருத்து கூறாமல் இருந்து வந்தது. சிவசேனாவின் முடிவு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்.பி அரவிந்த ஷாவந்த், அரசையும் ஆதரிக்கவில்லை; எதிர்க்கட்சியையும் ஆதரிக்கவில்ல. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்திருக்கிறார்.