நம்பிக்கை இல்லா தீர்மானம்: எம்.பிக்களுக்கு தெலுங்குதேசம் கொறடா உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் நிலையில் லோக்சபாவில் அனைத்து எம்பிக்களும் தவறாமல் ஆஜராக வேண்டும் என தெலுங்குதேசம் கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி 2 நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஒரு நோட்டீஸையும் கொடுத்திருக்கிறது. இந்த தீர்மானங்களை சபை ஒப்புக் கொள்ள வேண்டும் என இரு கட்சிகளும் இன்று வலியுறுத்த உள்ளன.

இந்த நிலையில் எம்பிக்கள் அனைவரும் லோக்சபாவுக்கு வருகை தர வேண்டும் என தெலுங்குதேசம் கட்சி கொறடா உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேநேரத்தில் பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் சிவசேனா எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறது.
சிவசேனாவின் முடிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications