பிளான் 350.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பாஜக வைத்திருக்கும் அல்டிமேட் திட்டம்!
மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை லோக்சபாவில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை லோக் சபாவில் சீக்கிரம் அனுமதித்ததற்கு மிக முக்கியமான காரணங்கள் சில சொல்லப்படுகிறது.
Recommended Video

டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை லோக்சபாவில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை லோக் சபாவில் சீக்கிரம் அனுமதித்ததற்கு மிக முக்கியமான காரணங்கள் சில சொல்லப்படுகிறது. முக்கியமாக அவையில் 350 பேர் பாஜகவிற்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை லோக்சபாவில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம்தான் தற்போது இந்தியாவில் ஹாட் டாப்பிக். பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று சில முக்கிய கட்சிகள் தெரிவித்து இருக்கிறது.
ஆனால் 50க்கும் அதிகமான கட்சிகள் பாஜகவிற்கு எதிராக களமிறங்கி இருக்கிறது. லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

என்ன காரணம்
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முக்கியமான காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. பாஜக சில முக்கியமான மசோதாக்களை, அவர்களுக்கு பிடித்த சில மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய இருக்கிறது. ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் தினமும் பிரச்சனை நடக்கும் என்று முதல் வாரமே, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி அளிக்க முடிவெடுத்து இருக்கிறார்கள்.

பேச போகிறார்
இந்த நிலையில் மிக முக்கியமாக பாஜக பெரிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி நாளை நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பிற்கு முன், பிரதமர் மோடி பேச இருக்கிறார். நம்பிக்கை இல்லை தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன் பிரதமர் உருக்கமான உரை ஒன்றை பேச திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது பாஜகவிற்கு பெரிய நன்மை தரும் என்று கூறப்படுகிறது.

பிளான் 350
மேலும் இன்று மாலைதான் பாஜக அதிமுகவிடம் ஆதரவு கோரிக்கை விடுத்துள்ளது.அதன்படி அதிமுகவும் பாஜகவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள அதிக அளவில் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாஜகவின் பலம் 350 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜகவின் பலம் 313 ஆக இருக்கிறது.

இதனால் என்ன பயன்
இந்த பிளான் 350 மூலம் பாஜவிற்கு நிறைய பலன் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் மத்தியில், மீண்டும் தாங்கள்தான் பெரிய கட்சி என்று நிரூபிக்க இந்த வாக்கெடுப்பு உதவும். மேலும் எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்தால், பாஜகவை வீழ்த்திவிட முடியும் என்று நினைப்பதை முறியடிக்கவும் பாஜகவிற்கு இந்த பிளான் 350 உதவும் என்று கூறப்படுகிறது.
-
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications