நம்பிக்கையில்லா தீர்மானம்: 1 மணி நேரம் பேச போகும் மோடி.. இரவோடு இரவாக தயாரான உணர்ச்சிகரமான உரை!
இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் பிரதமர் மோடி ஒருமணி நேரம் அவையில் பேச இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் எதிர்க்கட்சிகளின் உரைக்கு பதிலளித்து பிரதமர் மோடி ஒருமணி நேரம் அவையில் பேச இருக்கிறார்.
இதற்காக உணர்ச்சிகரமான உரை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இரவு முழுக்க இந்த உரை தயார் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி சார்பாக பாஜகவிற்கு எதிராக லோக் சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பரபரப்பாக இன்று கூட இருக்கும் இன்றைய லோக் சபா கூட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

யாருக்கு எவ்வளவு நேரம்
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன் நடக்கும் விவாதத்தில் யார் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது . அதன்படி பாஜக 3 மணி 33 நிமிடம், காங்கிரஸ் 38 நிமிடம், அதிமுகவுக்கு 29 நிமிடம், . திரிணாமுல் காங்கிரஸ் 27 நிமிடம், பிஜு ஜனதா தளம் 15 நிமிடம், தெலுங்கு தேசம் 13 நிமிடம், தெலுங்கானா ராஷ்டீரிய சமித 9 நிமிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 7 நிமிடம், சமாஜ்வாதி 6 நிமிடம், தேசியவாத காங்கிரஸ் 6 நிமிடம், லோக் ஜனசக்தி கட்சி 5 நிமிடம் பேச முடியும்.

வாய்ப்பு
இந்த நிலையில் இந்த நேர ஒதுக்கீடு பாஜக கட்சிக்கு பெரிய பலனை அளிக்கும் என்று கூறப்படுகிறது. பாஜக இந்த நிகழ்விற்காக பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்துள்ளது. எதிர்க்கட்சிகளின் உரைக்கு எதிராக என்ன பேசலாம் என்று நேற்று காலையில் இருந்தே திட்டமிட்டு வருகிறது. 3.30 மணி நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதால், நிறைய முக்கியமான விஷயங்களை பேச பாஜக முடிவெடுத்து இருக்கிறது.

பாஜகவில் யார்
பாஜகவில் மொத்தம் முக்கியமான நபர்கள் மட்டும் பேச இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதிக நேரம் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. அதன்படி மோடி, ராஜ்நாத் சிங், ராஜேந்திர சிங், விரேந்திர சிங், உள்ளிட்டவர்கள் அதிக நேரம் பேச வாய்ப்புள்ளது. இவர்கள் என்ன மாதிரியான விஷயங்களை பேசுவார்கள் என்றும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

மோடி சிறப்பு உரை
பாஜகவின் உரையை மோடிதான் முடித்து வைக்க இருக்கிறார். இன்று அவர் சுமார் 1 மணி நேரம் அவையில் பேச இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதில் அவர் உணர்ச்சிகரமாக மக்களுக்கு சில விஷயங்களை கூறுவார். நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பேச்சு உருவாக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடம் மட்டுமே கொடுக்கப்பட்டு இருப்பதால் நிறைய முக்கியமான விஷயங்களை அந்த கட்சியால் பேச முடியாது என்று கூறப்படுகிறது.
-
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications