கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ‘நோ இரட்டை இலை‘ வேறொரு சின்னம் ஒதுக்கீடு
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுகவுக்கு இரட்டை மின்கம்பம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுகவுக்கு இரட்டை மின்கம்பம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 12.5.2018 அன்று நடைபெறவுள்ள கர்நாடக மாநில சட்டசபை பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் காந்திநகர் தொகுதியில் கர்நாடக மாநில கழகச் செயலாளர் யுவராஜ் போட்டியிடுகிறார்.

ஹனூர் தொகுதியில் ஆர்.பி.விஷ்ணுகுமாரும், கோலார் தங்கவயல் தனித்தொகுதியில் கர்நாடக மாநில அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் அன்பு போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்படவில்லை.
அதற்கு பதிலாக இரட்டை மின்கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பு தாமதமாக கடிதம் வழங்கியதால் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications