கெஜ்ரிவால் பங்கேற்ற குடியரசு தின விழாவில் "இங்க்" பேனாவுக்கு தடை!
டெல்லி: டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்ட குடியரசு தின விழாவிற்கு வந்தவர்கள் மை பேனா கொண்டு வர போலீசார் தடை விதித்தனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பல இடங்களில் பல முறை மை வீசப்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இளம்பெண் ஒருவர் கெஜ்ரிவால் மீது கருப்பு மையை வீசினார்.

முதல்வரை போலீசார் பாதுகாக்க தவறிவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வடக்கு டெல்லியில் உள்ள சத்ராசால் ஸ்டேடியத்தில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
குடியரசு தின விழாவுக்கு வந்தவர்கள் மை பேனாவை ஸ்டேடியத்திற்குள் கொண்டு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. மை பேனா கொண்டு வந்தவர்களிடம் இருந்து அவற்றை போலீசார் வாங்கி வைத்து விழா முடிந்து செல்கையில் திருப்பிக் கொடுத்தனர்.
டெல்லி போலீசார் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சரியான பாதுகாப்பு அளிப்பது இல்லை என்று ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications