பொங்கலுக்கு விடுமுறை இல்லை... பாஜக அரசின் அதிரடியால் அதிர்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்!
நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயம் அல்ல என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பணியாற்றி வரும் மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டெல்லி: நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயம் அல்ல என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும் கட்டாய விடுமுறை தினத்திலிருந்து பொங்கல் விடுமுறை நீக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டு முழுவதும் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் சூரியன், மழை, பனி உள்ளிட்ட இயற்கை சக்திகளுக்கும், கடவுளுக்கும் நன்றி செலுத்தும் பண்டிகையாக பொங்கலை முன்னோர்கள் கொண்டாடினர். பிற்காலத்தில் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தொடங்கினர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், விருப்ப விடுமுறையாக அன்றைய தினத்தை எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கியமான பண்டிகை பொங்கல். தமிழர்கள் பண்டிகை இது. இப்பண்டிகை கட்டாய விடுமுறை தினத்திலிருந்து மத்திய அரசு நீக்கியுள்ளதால் தமிழகத்தில், மத்திய அரசு ஊழியர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். ஆனால் மலையாள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகைக்கு பொது விடுமுறை விடப்படுவது குறிப்பிடத்தக்கது.
தமிழர் விரோத மத்திய பாஜக அரசின் இந்த அறிவிப்பால் தமிழக மத்திய அரசு ஊழியர்கள் முழுமையாக விடுமுறையை கொண்டாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications