கர்நாடகாவில் இன்று முழுஅடைப்பு எதுவும் கிடையாது - தலைமை செயலாளர் தகவல்
பெங்களூர்: பெங்களூரில் இன்று பந்த் நடத்த பல்வேறு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் எனவும் முழு அடைப்பு எதுவும் இல்லை எனவும் கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு செப்டம்பர் 20ம் தேதி வரை 12 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு நேற்று உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடகத்தில் பதற்றம் நிலவி வருகிறது. பெங்களுரூ, மைசூரு உள்ளிட்ட முக்கிய நகரில் உள்ள தமிழர்கள் கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன. தீ வைத்து கொளுத்தப்படுகின்றன. தொடர்ந்து அங்கு தமிழர்கள் சொத்துக்கள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகம் முழுவதும் மீண்டும் பந்த் நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தன. கர்நாடகாவில் நடக்க இருக்கும் பந்த்தால் பெங்களூரூ நகரமே ஸ்தம்பிக்கும் நிலை உருவாகி இருந்தது. பந்துக்கு 110 சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், இன்று முழு அடைப்பு எதுவும் கிடையாது என அம்மாநில தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சில தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. அதேபோல் தனியார் பள்ளிகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள் அந்தந்த பள்ளி நிர்வாகத்திடம் கேட்டு தெரிந்து கொள்ளும்படி பெங்களூரு மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், 144 தடை உத்தரவு இன்று இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 16 இடங்களிலும் நாளை வரை அந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் நாளை ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications