3 ஆயிரம் கோடி இழப்பு எதிரொலி.. ரயில்களில் அபாய சங்கிலிக்கு வந்தது அபாயம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயில் பயணத்தின் போது, அவசர தேவைக்காக, அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தும் வசதி இனி இருக்காது. இதற்கு மாற்றாக, டிரைவரை மொபைல் போனில் அழைத்து, ரயிலை நிறுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் பெட்டிகளில் அபாய சங்கிலி என்ற ஒன்று பொருத்தப்படுவது காலம் காலமாக தொடருகிறது. ஆனால், அறியாமலோ அல்லது சாதாரண காரணங்களுக்கோ கூட அந்த சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்துவது அதிகரித்துள்ளது. கிரிமினல்களும், ரயிலில் இருந்து தப்பியோட இதுபோன்ற வழிமுறையை பின்பற்றுகின்றனர்.

No more pulling chain to stop train

இதன் காரணமாக, ரயில்கள் தாமதமாகச் செல்ல நேரிடுவதோடு, ரயில்வே துறைக்கு இழப்பையும் ஏற்படுத்துகின்றன. இந்த சம்பவங்கள் மூலமாக மட்டும், 3,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில் கமிட்டி நடத்திய ஆய்வில், தெரிய வந்துள்ளது.

எனவே சங்கிலிகளுக்கு மாற்றாக, ரயில் இன்ஜின் டிரைவர் மற்றும் துணை டிரைவர் ஆகியோரின் மொபைல் போன் எண்கள் அச்சடிக்கப்பட்டு, பெட்டிகளில் ஒட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அவசரத் தேவையின் போது, பயணிகள், டிரைவரை மொபைல் போனில் அழைத்து, ரயிலை நிறுத்திக் கொள்ளலாம்.

ஆனால், ஓடும் ரயலில் சிக்னல் கிடைக்காவிட்டால் எப்படி போன்பேசுவது என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இனிமேல் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளில் அபாய சங்கிலி இருக்க போவதில்லையாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+