அருணாசலப் பிரதேசத்தில் சாலை அமைக்க எதிர்ப்பா? சீனாவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அருணாசலப் பிரதேசத்தில் சாலை அமைப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிப்பதற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அருணாசலப் பிரதேசத்தில் ரூ40 ஆயிரம் கோடி செலவில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இது குறித்து டெல்லி புறநகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராஜ்நாத் பேசுகையில், இந்தியாவுக்கு எந்த ஒரு நாடும் எச்சரிக்கை விடுக்க முடியாது.
இந்தியா வல்லமைவாய்ந்த நாடு. சீனாவுக்கு சில அதிருப்தி இருந்தால் இருநாடுகளும் உட்கார்ந்து பேசுச்சுவார்த்தை நடத்தலாம் என்றார்.












Click it and Unblock the Notifications