ஹெல்மெட் அணியாவிட்டால் இனி பெட்ரோல், டீசல் கிடையாது: இது எம்.பி.யில்

Subscribe to Oneindia Tamil

போபால்: ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகனம் ஓட்டினால் அவர்களுக்கு பெட்ரோல், டீசல் அளிக்கக் கூடாது என்று மத்திய பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகளை ஹெல்மெட் அணியுமாறு அரசும், போக்குவரத்து போலீசாரும் எத்தனை முறை கூறினாலும் அவர்கள் கேட்பது இல்லை. ஏதோ ஹெல்மெட் அணியாமல் செல்வது தான் ஸ்டைல் என்று நினைக்கிறார்கள்.

No petrol without helmet in MP

இந்நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மத்திய பிரதேச அரசு அதிர்ச்சி அளித்துள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்பனை செய்ய வேண்டும் என்று மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பெட்ரோல் பங்குகளில் இருசக்கர வாகன ஓட்டிகளை ஹெல்மெட் அணிய வலியுறுத்தி பேனர்களை வைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்டுவிட்டு பெட்ரோல், டீசல் விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துகளில் சிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளில் பலர் ஹெல்மெட் அணியாததால் தலையில் காயம் அடைந்து பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+