5,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா மத்திய அரசு?
ரூ.5,000 மற்றும் ரூ.10,000 நோட்டுகளை வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
டெல்லி: ரூ.5,000 மற்றும் ரூ.10,000 மதிப்பிலான நோட்டுகளை வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து மக்களிடம் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வங்கிகளிடமும், தபால் அலுவலகங்களிடமும் ஒப்படைக்கப்பட்டன.

பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் வங்கி, ஏடிஎம் வாசல்களில் மக்கள் மணிக்கணக்கில் காத்து கிடந்தனர். இந்நிலையில் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுப்பதற்கு ஆர்பிஐ கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்நிலையில் அவ்வப்போது பணம் எடுப்பதற்கான தொகையை அதிகரித்துக் கொண்டே வந்த ஆர்பிஐ, ஒரு கட்டத்தில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை நீக்கியது.
இதனிடையே, ரூ.1000 நோட்டு அச்சடிக்கப்படுவதாகவும், ரூ.2000 நோட்டும் செல்லாததாக அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதைத் தொடர்ந்து ரூ.2000 நோட்டை திரும்ப பெறும் திட்டம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
அதேபோல் ரூ.1000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை இல்லை என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்தி தாஸ் காந்தி தெளிவுபடுத்தினார். இந்நிலையில் ரூ.5000 மற்றும் ரூ.10000 நோட்டுகளை வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications