டெபிட் கார்டு, ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங்குக்கு டிச. 31 வரை 'நோ' சேவைக் கட்டணம் சக்திகாந்ததாஸ்
டெபிட் கார்டுகளுக்கு டிச. 31 வரை சேவை கட்டணம் இல்லை.
டெல்லி: டெபிட் கார்டுகள் மற்றும் ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங்களுக்கு டிசம்பர் 31-ந் தேதி வரை சேவைக் கட்டணம் இல்லை என்று மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சக்திகாந்த தாஸ் கூறியதாவது:
நாடு முழுவதும் இதுவரை 80,000 ஏடிஎம் மையங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய ஏடிஎம் மையங்களும் விரைவில் சீரமைக்கப்படும்.
மத்திய அரசானது மின்னணு பணபரிமாற்ற முறையை விரும்புகிறது. மொபைல் போன் மூலமாக செலுத்தப்படும் கட்டணங்களுக்கு சேவை வரி விதிக்கப்படமாட்டாது.
டெபிட் கார்டு மற்றும் ஆன்லைன் ரயில் கட்டண முன்பதிவுக்கான சேவைக் கட்டணங்கள் டிசம்பர் 31-ந் தேதி வரை வசூலிக்கப்படமாட்டாது. மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ21,000 கோடிய நபார்ட் வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது.
இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.