பிரியங்காவுக்கு கட்சியில் உயர் பதவி எதுவும் காலியாக இல்லை.. தரூர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரியங்கா காந்திக்கு, காங்கிரஸ் கட்சியின் உயர் பதவி எதுவும் காலியாக இல்லை என்று சசி தரூர் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இருக்கிறார், துணைத் தலைவரும் இருக்கிறார். இருவரும் சிறப்பாக சீரிய முறையில் பணியாற்றி வருகின்றனர்.

பிரியங்கா காந்தியும், அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளின் பிரசாரத்தை தீவிரமாக கவனித்து வருகிறார்.
பிரியங்கா காந்திக்கு தற்போது காங்கிரஸ் கட்சியின் உயர் பதவி ஏதும் காலியாக இல்லை. தற்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அதை சிறப்பாக செய்து வருகிறார். அதற்கு மேல் வர அவர் விரும்பவில்லை.
அமேதி, ரேபரேலியில் பிரியங்காவின் செயல்பாடுகளால் சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்றார் தரூர்.












Click it and Unblock the Notifications