பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியே: நோபல் வென்ற பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் தாலர்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி என்று நோபல் பரிசு வென்ற பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் தாலர் தெரிவித்து உள்ளார்.
டெல்லி : மோடியின் உயர்மதிப்பு ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியே என்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற வல்லுநர் ரிச்சர்ட் தாலர் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடியால் அறிவிக்கப்பட்டு ஓர் ஆண்டு கடந்துவிட்டது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் சீர் குலைந்துவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. பா.ஜ.க இதை சிறப்பான பொருளாதார நடவடிக்கை என்றே இதுவரை சொல்லிவருகிறது.

தற்போது 2017ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற வல்லுநர் ரிச்சர்ட் தாலர் , பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது இந்திய மாணவர் ஒருவருக்கு அனுப்பிய இமெயிலில், கருப்புப் பணத்தை ஒழிக்க பணமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்துவது நல்லது தான்.
இருந்தாலும், அதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தது மிகவும் தவறான நடவடிக்கை. அதற்கு பதில் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது பொருளாதாரத்தை மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு செல்ல வழிவகுத்து இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பா.ஜ.க பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நியாயப்படுத்தும் விதமாக வெளியிட்ட செய்திகளில், பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் தாலரே இந்த நடவடிக்கையை பாராட்டி இருப்பதாக தெரிவித்தது. அதே சமயத்தில் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் உட்பட பல பொருளாதார வல்லுநர் இந்த நடவடிக்கை சரியானது அல்ல என்று தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து












Click it and Unblock the Notifications