"குழந்தையின் பாலின சோதனைக்கு மறுத்ததால் கர்ப்பிணி அடித்துக் கொலை"
நொய்டா: பாலியல் உறுதி சோதனைக்கு மறுத்த கர்ப்பிணி பெண்ணை உறவினர்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பாலியல் உறுதி சோதனைக்கு மறுப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் கணவரின் குடும்பத்தாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட பரிதாபம் சம்பவம் நிகழ்ந்துள்ளார்.
நொய்டாவில் கர்ப்பிணியாக இருந்த பெண்ணிடம் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டுபிடிக்கும் சோதனை செய்து கொள்ளுமாறு அவரது கணவர் குடும்பத்தார் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணோ அதனை மறுத்துள்ளார். இதனை அடுத்து மருமகளை அவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மருமகளை அடித்த உறவினர்கள் தப்பி ஒடிவிட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.