கடைசியில் நோக்கியாவும் வெடித்துவிட்டது.. போன் பேசும்போதே மரணம் அடைந்த ஒடிசா கல்லூரி பெண்
நோக்கியா போன் வெடித்ததால், ஒடிசாவில் கல்லூரி மாணவி ஒருவர் மரணம் அடைந்து இருக்கிறார்.
Recommended Video

புபனேஷ்வர்: நோக்கியா போன் வெடித்ததால், ஒடிசாவில் கல்லூரி மாணவி ஒருவர் மரணம் அடைந்து இருக்கிறார். போனில் பேசிக்கொண்டு இருக்கும் போதே இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.
இவரது முகம் மோசமாக சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து நோக்கியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
பொதுவாக நோக்கியா மாடல் மொபைல்கள் மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்படும். ஆனால் தற்போது அந்த நிறுவன மொபைல் ஒன்றே வெடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேசிக்கொண்டே இருக்கும் போது
ஒடிசா அருகே இருக்கும் கெய்ராகனி என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உமா ஓரம் என்ற 18 வயது மாணவி போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது சூடு தாங்காமல் அந்த இடத்திலேயே போன் வெடித்துள்ளது. போன் வெடித்ததில் அந்த பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

தலை உடைந்தது
இதில் அந்த பெண்ணின் தலை உடைந்து ரத்தம் வெளியே தெறித்துள்ளது. ஆனாலும் அந்த பெண் உயிருக்கு போராடி இருக்கிறார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்துள்ளார். கைகளிலும் மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

சார்ஜ் போட்டு இருந்தார்
அந்த பெண் போன் பேசும் போது சார்ஜ் போட்டுக் கொண்டே பேசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நோக்கியா நிறுவனம் மீது அந்த பெண்ணின் குடும்பம் வழக்கு தொடுக்க உள்ளது. பொதுவாக சாம்சங் மாடல் மொபைல்கள் சமீப காலங்களில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை சந்தித்து வருகிறது. தற்போது நோக்கியாவிற்கும் இந்த பிரச்சனை வந்துள்ளது.

நோக்கியா பதில்
இந்த விஷயத்தில் நோக்கியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு ''இந்த விஷயம் மிகவும் துக்ககரமானது. அந்த நோக்கியா போனின் மாடல் நோக்கியா 5233 என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எங்கே தவறு நடந்தது என்று விசாரிக்கப்படும். இதில் கண்டிப்பாக எங்களுடைய தவறு எதுவும் இருக்காது என்று நம்புகிறோம்'' என்றுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications