கடைசியில் நோக்கியாவும் வெடித்துவிட்டது.. போன் பேசும்போதே மரணம் அடைந்த ஒடிசா கல்லூரி பெண்
நோக்கியா போன் வெடித்ததால், ஒடிசாவில் கல்லூரி மாணவி ஒருவர் மரணம் அடைந்து இருக்கிறார்.
Recommended Video

புபனேஷ்வர்: நோக்கியா போன் வெடித்ததால், ஒடிசாவில் கல்லூரி மாணவி ஒருவர் மரணம் அடைந்து இருக்கிறார். போனில் பேசிக்கொண்டு இருக்கும் போதே இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.
இவரது முகம் மோசமாக சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து நோக்கியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
பொதுவாக நோக்கியா மாடல் மொபைல்கள் மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்படும். ஆனால் தற்போது அந்த நிறுவன மொபைல் ஒன்றே வெடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேசிக்கொண்டே இருக்கும் போது
ஒடிசா அருகே இருக்கும் கெய்ராகனி என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உமா ஓரம் என்ற 18 வயது மாணவி போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது சூடு தாங்காமல் அந்த இடத்திலேயே போன் வெடித்துள்ளது. போன் வெடித்ததில் அந்த பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

தலை உடைந்தது
இதில் அந்த பெண்ணின் தலை உடைந்து ரத்தம் வெளியே தெறித்துள்ளது. ஆனாலும் அந்த பெண் உயிருக்கு போராடி இருக்கிறார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்துள்ளார். கைகளிலும் மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

சார்ஜ் போட்டு இருந்தார்
அந்த பெண் போன் பேசும் போது சார்ஜ் போட்டுக் கொண்டே பேசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நோக்கியா நிறுவனம் மீது அந்த பெண்ணின் குடும்பம் வழக்கு தொடுக்க உள்ளது. பொதுவாக சாம்சங் மாடல் மொபைல்கள் சமீப காலங்களில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை சந்தித்து வருகிறது. தற்போது நோக்கியாவிற்கும் இந்த பிரச்சனை வந்துள்ளது.

நோக்கியா பதில்
இந்த விஷயத்தில் நோக்கியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு ''இந்த விஷயம் மிகவும் துக்ககரமானது. அந்த நோக்கியா போனின் மாடல் நோக்கியா 5233 என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எங்கே தவறு நடந்தது என்று விசாரிக்கப்படும். இதில் கண்டிப்பாக எங்களுடைய தவறு எதுவும் இருக்காது என்று நம்புகிறோம்'' என்றுள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications