வாரணாசியில் நான் போட்டியிட தயார்.. காங்கிரஸ்தான் கண்டுக்கலையே... திக்விஜய்சிங் புலம்பல்
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட தாம் விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டேன்..ஆனால் கட்சியினர் யாரும் என்னிடம் இதுபற்றி பேசவே இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் புலம்பித் தள்ளியிருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோதரா மற்றும் உ.பி.யின் வாரணாசி தொகுதிகளில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில் தாம் போட்டியிட தயாராக இருக்கிறேன்.. ஆனால் காங்கிரஸ் கட்சிதா சீட் கொடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் கூறியிருந்தார். இதையே கடந்த சில நாட்களாக திக்விஜய்சிங் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
ஆனால் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து திக்விஜய்சிங்கிடம் இதுபற்றி எவருமே பேசவில்லையாம்.. இதனால் நொந்து போன திக்விஜய்சிங், வாரணாசியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தேன். ஆனால் காங்கிரசார் ஒருவர் கூட என்னை அழைத்து இதுபற்றி பேசவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று புலம்பித் தள்ளிவிட்டார்.












Click it and Unblock the Notifications