அஸ்ஸாம்:அங்கீகாரம் பெறாமல் மாடுகளை வெட்டினால் இனி 8 ஆண்டு வரை சிறை- வடகிழக்கு மாநிலங்கள் அதிருப்தி!
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் அங்கீகாரம் பெறாமல் மாடுகளை இறைச்சிக்காக வெட்டினால் அல்லது மாடுகளை ஏற்றிச் சென்றால் 6 மாதம் முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் சட்டசபையில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அஸ்ஸாமில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது முதல் மாட்டிறைச்சி தடை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அஸ்ஸாம் சட்டசபையில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா கால்நடைகள் பாதுகாப்பு சட்ட மசோதா திங்கள்கிழமையன்று தாக்கல் செய்தார். இந்த புதிய சட்ட மசோதாவானது மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

கடும் கட்டுப்பாடுகள்
இந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: அஸ்ஸாமில் இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், மாட்டிறைச்சியை சாப்பிடாத சமூகத்தினர் வாழும் பகுதிகள், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் உள்ள இடங்களில் 5 கி.மீ. சுற்று வட்டாரத்தில் மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாது; உரிய அங்கீகாரம் அல்லது அனுமதி இல்லாமல் மாடுகளை இறைச்சிக்காக வெட்டவும் கூடாது; மாடுகளை இறைச்சிக்காக ஏற்றி செல்லவும் கூடாது.

8 ஆண்டுவரை சிறை
அனுமதியின்றி மாட்டிறைச்சி விற்பனை செய்தாலோ, மாடுகளை ஏற்றி சென்றாலோ 6 மாதத்தில் இருந்து 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்; அதேபோல் ரூ1,000 முதல் ரூ5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஜாமீன் இல்லை
இந்த சட்டத்தை மீறி செயல்பட்டு தப்பி ஓடி தலைமறைவானால் அவர்கள் வாழ்ந்த இடங்களிலும் பொது இடங்களில் அவர்களது புகைப்படங்கள் ஒட்டப்படும்; இந்த நபர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் தொடரப்படும் என்பதும் இந்த மசோதாவின் முக்கிய அம்சம்.

மாட்டிறைச்சி பயன்பாடு
அஸ்ஸாம் மாநிலத்தில் 34% முஸ்லிம்கள் வசிக்கின்றனர். அதேபோல் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையும் அதிகம். இதனால் மாட்டிறைச்சி பயன்பாடு வழக்கத்தில் உள்ளது. மேலும் மாட்டிறைச்சி பயன்பாடு என்பது அண்டை மாநிலங்களான நாகாலாந்து, மிசோரம், மேகாலயாவிலும் உள்ளது.

வடகிழக்கில் எதிர்ப்பு
அஸ்ஸாம் மாநிலத்தின் இந்த புதிய சட்ட மசோதா இதர வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மாவுடன் பேச இருப்பதாக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்திருக்கிறார். அத்துடன் மேற்கு வங்கம், பீகார், தெலுங்கானாவில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு மாடுகள் இறைச்சிக்காக கொண்டுவரப்படுகின்றன. தற்போதைய அஸ்ஸாம் மாநிலத்தின் வழியாகத்தான் மாடுகள் கொண்டு செல்லப்பட வேண்டும். தற்போதைய அஸ்ஸாம் புதிய சட்டத்தால் இறைச்சிக்காக மாடுகள் கொண்டுவரப்படுவது பாதிக்கும் என்பதும் வடகிழக்கு மாநிலங்களின் கருத்து.
-
சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
பாஜக விஜய்க்கு விரித்த சிவப்பு கம்பளம்.. YES சொல்வாரா? ஷேர் ஆட்டோ பாலிட்டிக்ஸ் தமிழகத்தில் எடுபடுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications