சபாஷ்.. பிரம்மாதம்.. விவசாயிகள் பிரச்சனையை தத்ரூபமாக காட்சிப்படுத்திய துர்கா பூஜை பந்தல்..!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தல்களில் விவசாயிகள் போராட்டம் கருவாக வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளதுபோராட்டக்களத்தில் விவசாயிகள் படும் இன்னலை தத்ரூபமாக கண் எதிரே கொண்டு வந்து நிறுத்தும் வகையில் துர்கா பூஜை பந்தல் அலங்காரங்கள் அமைந்துள்ளன.
மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜையின் போது சமூகம் சார்ந்த பிரச்சனைகளை மையமாக அதாவது கருவாக வைத்து பூஜை பந்தல்கள் அமைக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கூட தெற்கு கொல்கத்தாவில், கொரோனா லாக்டவுனால் புலம் பெயர் தொழிலாளர்கள் பட்ட துன்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அந்த வகையில் இந்தாண்டு வடக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை பந்தல் அலங்காரத்தில், உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் மோதியது போன்ற காட்சியும், காவல்துறை தாக்குதலால் காலணிகள் சிதறிக்கிடப்பது போன்ற காட்சியும் பூஜை நடைபெறும் இடத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் தீம் (Theme )அமைத்த துர்கா பூஜை குழு தலைவர் பிரதீக் சவுத்ரி இது தொடர்பாக கூறியதாவது, ''கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும் வகையில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் ஓராண்டை கடந்து தொடர்கிறது. போராட்டத்தில் பங்கேற்ற பலர் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள்.''
விவசாயிகளை முன்னிலைப்படுத்தி அவர்களை கவுரப்படுத்தும் நோக்கில் இந்த காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. துர்கா பூஜை பந்தல் அலங்கரிப்புகள் நிறைவடையும் தருவாயில் உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகள் கார் மோதி கொல்லப்பட்ட நிகழ்வு நடந்தது. எனினும் நாங்கள் அதையும் இதில் இணைத்து காட்சிப்படுத்தியிருக்கிறோம்'' என்றார் சவுத்ரி.

நாங்கள் விவசாயிகள்;தீவிரவாதிகள் அல்ல; உணவு உற்பத்தி செய்யும் வீரர்கள் தான் விவசாயிகள் என்ற வாசகமும் துர்கா பூஜை பந்தலில் இடம்பெற்றிருக்கிறது. விவசாயிகளை பெருமைப்படுத்தி அமைக்கப்பட்ட இந்த கருப்பொருளை அனிர்பன் தாஸ் என்ற கலைஞர் வடிவமைத்திருக்கிறார். பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு துர்கா பூஜை பந்தலை பார்வையிடத் தொடங்கியுள்ளனர்.
வடக்கு கொல்கத்தாவில் உள்ள டும்டும் பார்க் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வடிவமைப்பு தேசியளவில் கவனத்தை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications