'போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்': அமெரிக்கா எச்சரிக்கை
அண்மையில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியாவுடன் ராஜ்ஜிய மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்ளுமாறு அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
பியாங்யாங்கிற்கு எண்ணெய் விநியோகம் செய்வதை துண்டிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப சீனாவை கேட்டுக் கொண்டுள்ளதாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்தார்.
அமெரிக்கா முரண்பாடுகளை விரும்பவில்லை என்று கூறிய அவர், எனினும் போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி "முழுமையாக அழிக்கப்படும்" என்று எச்சரித்தார்.
தென் பியாங்யாங் பிராந்தியத்தில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வட கொரியா நிகழ்ந்தியதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன் கிழமையன்று ஏவப்பட்ட இந்த ஏவுகணை 4,475 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்ததாக வட கொரியா கூறியுள்ளது - சர்வதேச விண்வெளி நிலையத்தை விட இது 10 மடங்கு உயர்ந்ததாகும் - இது பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் திறன் வாய்ந்ததாகும்.
எனினும், இந்த கூற்று நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறான தொழில்நுட்பத்தை அமைப்பதற்கான அந்நாட்டின் திறன் குறித்து வல்லுநர்களும் சந்தேகித்துள்ளனர்.
இந்த சோதனையை "குறை கூற முடியாது" என்றும் இது "ஒரு பெரிய திருப்புமுனை" என்றும் வட கொரியா தலைவர் கிம் ஜாங்-உன் கூறியுள்ளார்.
இது போன்ற "தொடர்ச்சியான தாக்கும் மனப்பான்மை நடவடிக்கைகள்" உறவை சீர்குலைக்கவே செய்கிறது என அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே எச்சரித்தார்.
இதற்கிடையில், வரி சீர்திருத்தம் குறித்து மீசூரியில் பேசிய டிரம்ப், வட கொரியத் தலைவர் கிம்மை "மோசமான மனநிலை உடையவர்" என்றும் "குட்டி ஏவுகணை மனிதர்" என்றும் விமர்சனம் செய்தார்.
இதனை தொடர்ந்து, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டிரம்ப், வட கொரியாவிற்கு எண்ணெய் விநியோகம் செய்வதை சீனா நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ஹெய்லி குறிப்பிட்டார்.
மேலும்,"ஆத்திரம் மூட்டுவதை நிறுத்திக் கொள்ளவும், அணுஆயுத பாதையில் இருந்து விலகவும் வட கொரியாவை சமாதானப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும்" என ஷி ஜின்பிங்கிடம் டிரம்ப் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை கூறியது.
இதற்கு பதிலளித்த ஷி ஜின்பிங், வடகிழக்கு ஆசியாவில் சமாதானத்தையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டி, வட கொரிய தீபகற்கத்தை முடித்து வைப்பதே தமது இலக்கு என்று கூறியதாக, சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா தெரிவித்துள்ளது.
சீனா, வட கொரியாவின் மிகப் பெரிய கூட்டாளியாகவும், மிக முக்கியமான வர்த்தக பங்குதாரராகவும் மற்றும் நில எல்லைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளது.
பிற செய்திகள் :
- சமூக ஊடகங்களில் விதிகளை மீறி கணக்குத் தொடங்கும் சிறுவர்கள்
- என் பிரதமரை கேள்வி கேட்க எனக்கு உரிமையில்லையா?': பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டி
- பிட்காயின் - எளிதில் உடையும் நீர்க்குமிழியா? இல்லை அதுதான் எதிர்காலமா?
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி















Click it and Unblock the Notifications