தமிழகத்துக்கு அதிக மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது?
தமிழகத்துக்கு அதிக மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை வரும் 29ஆம் தேதி முதல் தொடங்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
டெல்லி: தமிழகத்துக்கு அதிக மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை வரும் 29ஆம் தேதி முதல் தொடங்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு நாடு முழுவதும் வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென் மேற்கு பருவமழை வட மாநிலங்களில் தற்போதும் அடித்து ஆடி வருகிறது.
[ பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் உயர்வு.. வாகன ஓட்டிகள் பெரும் அவதி! ]
தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்கள் பலத்த மழையை பெற்றன. கேரளாவில் கொட்டிய மழையால் அம்மாநிலம் வரலாறு காணாத சேதத்தை சந்தித்தது.

வரலாறு காணாத சேதம்
கேரளாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அனைத்து மாநிலங்களில் இருந்தும் கேரள மாநிலத்துக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.

இமாச்சலில் வெளுக்கும் மழை
இந்நிலையில் தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை கொட்டி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது இமாச்சலில் தென் மேற்கு பருவமழை வெளுத்து வருகிறது.

33 சதவீத்ம் அதிகம்
செப்டம்பர் மாதத்தில் இமாச்சல பிரதேசத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் அதிக மழை பெய்கிறது. கடந்த 4 தினங்களில் அங்கு இயல்பை விட 33 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

29ஆம் தேதி நிறைவடைகிறது
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் 29ஆம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை நிறைவடைகிறது.

29ஆம் தேதி முதல் தொடங்கும்
தென்மேற்கு பருவமழை நிறைவடையும் அன்றைய நாளில் இருந்தே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதற்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

சாதகமாக இருக்கும்
தமிழகத்துக்கு அதிக மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை கடந்த 3 ஆண்டுகளாக முறையாக பெய்யவில்லை. இதனால் ஏற்பட்ட வறட்சியால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பரவலாக நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications