2026 வரை மோடி ஆட்சி தான்... 450 ஆண்டுகளுக்கு முன்பே நாஸ்டிராடமஸ் சொல்லிட்டாராம்!
டெல்லி: இந்தியாவில் 2014ம் ஆண்டு முதல் 2016 வரை மோடி தலைமையிலான ஆட்சி தான் நடக்கும். அப்போது உலகின் மிகப் பெரிய சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என 450 ஆண்டுகளுக்கு முன்னர் பிரெஞ்சு நாட்டு "ஜோதிடர்" நாஸ்டிராடமஸ் எழுதிய குறிப்பில் கூறப்பட்டுள்ளதாம்.
பிரெஞ்ச் நாட்டு நாஸ்டிராடமஸ். இவர் வருங்காலத்தில் உலகில் நடக்கப் போகும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கணிப்பை கடந்த 1555ம் ஆண்டு எழுதி வைத்துள்ளார்.
பிரெஞ்ச் மொழியில் எழுதப்பட்ட அந்த குறிப்பு புத்தகத்தின் 32 மற்றும் 33 ம் பக்கங்களில் இந்தியா குறித்தும் அவர் எழுதி உள்ளாராம். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் பொற்காலம்...
இந்தியாவில் அதீத ஆற்றல் கொண்ட மனிதர் ஆட்சிக்கு வருவார். அவரது ஆட்சி காலம், இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் பொற்காலமாக திகழும்.
மக்களின் தலைவர்...
அவரது சனாதன தர்மத்தால் இந்தியா மிகச் சிறந்த இந்து நாடாக மாறும். துவக்கத்தில் பலரும் அவரை வெறுத்தாலும், பின்பு அவரை தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்வார்கள்.
குளோபல் மாஸ்டர்...
அவரது தலைமையில் இந்தியா "குளோபல் மாஸ்டர்" ஆக மட்டுமின்றி, பல நாடுகளுக்கும் இந்தியா புகலிடமாக மாறும்" என இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோடி ஆட்சி...
மேலும், ஊழல் காரணமாக 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ச்சி அடையும். 2014 முதல் 2026 வரை மோடி ஆட்சி நடைபெறும்.
3 தூண்கள்...
வாஜ்பாய், அத்வானி, மோடி ஆகியோர் பாஜகவின் 3 தூண்களாக திகழ்வார்கள். அவர்களில் மோடி, மிகப் பெரிய ஆற்றல் வாய்ந்தவராக திகழ்வார்.
காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பார்...
அவரது ஆட்சியில் படிப்படியாக இந்தியாவில் மாற்றங்கள் நிகழும். அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா நாடுகளுடனான பிரச்னை, காஷ்மீர் பிரச்சினை ஆகியவற்றையும் தீர்ப்பார் எனவும் அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
9/11 தாக்குதல்...
ஏற்கனவே, நாஸ்டிராடமஸ் தனது கணிப்பு புத்தகத்தில் கூறிய ஹிட்லர் ஆட்சி வீழ்ச்சி அடைவது, ஒபாமா அமெரிக்காவின் அதிபர் ஆவது, அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் செப்டம்பர் 11ம் தேதி இடிக்கப்பட்டது, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல முக்கிய வரலாற்று நிகழ்வுகள் குறித்து எழுதி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.