மோடிக்காக ஓட மாட்டீங்களா.. மாணவர்களுக்கு 'ஃபைன்' போட்டஅடாவடி கல்லூரி!
ஜாம்நகர்: குஜராத்தில் நடந்த நரேந்திர மோடியின் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஆதரவு திரட்டும் வகையில் நடத்தப்பட்ட ஒற்றுமை ஓட்டத்தில் கலந்து கொள்ளாத தனது மாணவர்களுக்கு தலா ரூ. 100 அபராதம் விதித்துள்ளது குஜராத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி. இதனால் மாணவர்கள் கொதித்துப் போயுள்ளனர்.
மோடிக்கு ஆதரவு திரட்டவும், அவர் குஜராத்தில் நிர்மானிக்கப் போகும் படேல் சிலைக்கு ஆதரவு மற்றும் நிதி திரட்டும் வகையிலும் யுனிட்டி பார் ரன் என்ற பெயரில் மராத்தான் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது பாஜக.
நாடு தழுவிய அளவில் நடந்த இதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். ஆனால் மேற்கு குஜராத் மாநிலம், ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த பல மாணவர்கள் இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ளவில்லையாம்.

கிட்டத்தட்ட 200 மாணவர்கள் இதில் பங்கேற்கவில்லை. இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதைப் பார்த்து 200 பேரும் அதிர்ச்சியும், கொதிப்பும் அடைந்துள்ளனர்.
ஆனால் இந்த நோட்டீஸுக்கு கடும் எதிர்ப்பும், விமர்சனமும் எழுந்ததைத் தொடர்ந்து நோட்டீஸ்களை வாபஸ் பெற்றுக் கொண்டது கல்லூரி நிர்வாகம். மாணவர்களும் இந்த உத்தரவுக்கு கடும் ஆட்சேனை எழுப்பியதால், மாணவர்கள் தஙக்ளுக்கு எதிராக திரண்டு விடுவார்கள் என பாஜகவும் பயந்து கல்லூரி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு நோட்டீஸை வாபஸ் பெறக் கேட்டுக் கொண்டதாம்.
இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலையாப்பா...!












Click it and Unblock the Notifications