டிக்கெட் எடுத்துவிட்டு கட்டணத்தை ஈ.எம்.ஐ.யில் செலுத்தலாம்... ஸ்பைஸ் ஜெட் புதிய ஆஃபர்
டெல்லி: விமான கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் புதிய வசதியை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனமானது இந்திய உள்நாட்டு விமான சேவைகளை மிக குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.
இந்நிலையில் தற்போது வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் எளிதான தவணை முறை கட்டண டிக்கெட் வசதியை ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு, "புக் நௌ, பே லேட்டர்" என பெயரிடப் பட்டுள்ளது.

இதன் மூலம் டிக்கெட் பெறும் வாடிக்கையாளர்கள் 3 முதல் 12 மாத தவணையில் தங்கள் பணத்தை திருப்பி செலுத்தலாம். வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் மாத அளவைப் பொறுத்து, அதற்கான வட்டி வீதம் 12 முதல் 14 சதவீதம் வரை இருக்கும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வசதியை ஆக்சிஸ் வங்கி, எச்.எஸ்.பி.சி, கொட்டக் வங்கி மற்றும் ஸ்டாண்டட் ஷாட்டட் வங்கிகளின் கிரெடிட் கார்ட் வைத்திருக்கும் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications