யுவர் ஆனர், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பார்தியின் நாயிடம் விசாரிக்க வேண்டும்: போலீஸ்
டெல்லி: முன்னாள் டெல்லி சட்டத் துறை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வுமான சோம்நாத் பார்தியின் நாயை தங்கள் காவலில் எடுக்க போலீசார் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.
முன்னாள் டெல்லி சட்டத் துறை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வுமான சோம்நாத் பார்தி மீது அவரது மனைவி லிபிகா மித்ரா வரதட்சணை கொடுமை புகார் அளித்தார். சோம்நாத் தன்னை அடித்து துன்புறுத்தியதுடன், நாயை விட்டு கடிக்க வைத்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே சோம்நாத் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கார்க் திங்கட்கிழமை தள்ளுபடி செய்தார். லிபிகா கடந்த 2013ம் ஆண்டு கர்ப்பமாக இருந்தபோது சோம்நாத் கூறியதால் கடித்த அவர்களின் வீட்டு நாய் டானை தங்கள் காவலில் எடுக்க போலீசார் நீதிபதியிடம் அனுமதி கோரினர்.
இது குறித்து சோம்நாத்தின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறுகையில்,
போலீசார் நாயிடம் எப்படி விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்குவார்கள் என்று எனக்கு புரியவில்லை என்றார்.
நாயை காவலலில் எடுப்பது குறித்து கருத்து தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். நாய் டான் தற்போது சோம்நாத் வீட்டில் தான் உள்ளது.












Click it and Unblock the Notifications