மருத்துவமனை வளாகத்தில் செக்ஸ் தொல்லை... மும்பை நர்சுகள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மருத்துவமனை வளாகத்தில் பெண் செவிலியர் ஒருவர் மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மும்பை சியான் மருத்துவமனை செவிலியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை சியான் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் செவிலியர் ஒருவரை, மர்ம நபர்கள் இரண்டு பேர் அதிகாலை வேளையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாடே இதற்குக் காரணம் கூறப்படுகிறது.

எனவே, மருத்துவமனையின் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி சுமார் 800 செவிலியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு குறைபாடே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் எனத் தெரிவித்துள்ள செவிலியர்கள், பெண்கள் பணி புரியும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை என வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications