ஒடிஷா சட்டசபையில் இந்திக்கு தடை- சிவசேனா பாய்ச்சல்!!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஒடிஷா மாநிலத்தில் இந்தியில் பேசுவதற்கு அம்மாநில சபாநாயகர் தடை விதித்துள்ளார். இதற்கு சிவசேனா கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஒடிஷா மாநில சட்டசபையில் கடந்த வாரம் விவாதம் ஒன்று நடைபெற்று வந்தது. அப்போது உறுப்பினர் ஒருவர் இந்தியில் பேசினார். இதனால் கடுப்பாகிப் போன ஒடிஷா சபாநாயகர், இந்த மாநில சட்டசபையில் மாநில மொழியான ஒடியாவிலோ அல்லது ஆங்கிலத்திலோதான் பேச வேண்டும். இந்தில் பேசுவதை ஏற்க முடியாது என்று கூறிவிட்டார்.

Odisha Assembly ‘ban’ on Hindi shocking, says Shiv Sena

தற்போது இந்த விவகாரத்தை சிவசேனா கையில் எடுத்துள்ளது. இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான சாம்னாவில் எழுதப்பட்டுள்ளதாவது:

பிரதமர் மோடி இந்தியில்தான் பேசுகிறார். பூடான் நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி இந்தியில்தான் உரையாற்றினார். இப்படி பிரதமர் மோடி இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒடிஷா மாநில சட்டசபையில் இந்தியில் பேசுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியில் கேள்வி கேட்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது அதிர்ச்சி அளிக்கிறது. ஆங்கிலம் உலக மொழிதான் என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் தேசிய மொழியான இந்திக்கு அடுத்ததாக 2வது அந்ததஸ்தை கொடுக்க வேண்டும் என்று நியாயப்படுத்துவதா?

இவ்வாறு சாம்னாவில் எழுதப்பட்டுள்ளது.

இதனிடையே ஒடிஷா சட்டசபையில் எம்.எல்.ஏ. ஒருவருக்கு இந்தியில் இன்று பேச அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+