கொரோனா: ஒடிஷாவில் ஏப்ரல் 30 வரை லாக்டவுன் நீட்டிப்பு! நாட்டிலேயே முதலாவது மாநிலம்!
புவனேஸ்வர்: ஒடிஷாவில் ஏப்ரல் 30-ந் தேதி வரை லாக்டவுனை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் நவீன்பட்நாயக் அறிவித்துள்ளார். நாட்டிலேயே லாக்டவுன் காலத்தை நீட்டித்து அறிவித்திருக்கும் முதல் மாநிலம் ஒடிஷா.
Recommended Video
கொரோனா பரவுவதைத் தடுக்க 21 நாட்கள் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் ஏப்ரல் 14-ந் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் லாக்டவுனை நீட்டிக்கலாமா? என்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திலும், லாக்டவுனை நீட்டிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதையே பிரதமர் மோடி சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்நிலையில் நாளை மறுநாள் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார். ஏற்கனவே பல மாநிலங்கள் லாக்டவுன் காலத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளன. இதனிடையே லாக்டவுன் காலத்தை ஏப்ரல் 30-ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஒடிஷா அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக கூறிய ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், தற்போதைய சூழ்நிலையில் ஒடிஷாவில் ஏப்ரல் 30-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார். மத்திய அரசு அறிவிக்கும் முன்னரே லாக்டவுன் நீட்டிப்பு அறிவிப்பை வெளியிட்ட முதலாவது மாநிலம் ஒடிஷா.
பிற மாநிலங்களும்?
மத்திய அரசு முடிவை அறிவிக்கும் முன்னரே ஒடிஷாதான் லாக்டவுனை நீட்டித்திருக்கிறது. அனேகமாக ஒடிஷாவை பின்பற்றி பிற மாநிலங்களும் லாக்டவுன் காலத்தை நீட்டிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications