காந்தியை கொன்ற கோட்சேவை பிடித்து கொடுத்தவருக்கு ரூ.5 லட்சம் நிதி: ஒடிசா அரசு அறிவிப்பு
புவனேஸ்வர்: தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சேயை பிடித்துக் கொடுத்த ரகுநாயக்கின் மனைவிக்கு ஒடிசா மாநில அரசு ரூ.5 லட்த்தை நிதி உதவியாக வழங்கியுள்ளது.
தேச தந்தை மகாத்மா காந்தி தலைமையில் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நள்ளிரவில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. நாம் சுதந்திரம் அடைந்த சில மாதங்களிலேயே, அதாவது 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி அவரை நாதுராம் கோட்சே என்பவர் சுட்டுக்கொன்றார்.

காந்தியடிகள் கொல்லப்பட்ட போது, அவரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை தைரியமாக ரகுநாயக் என்பவர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். இதையடுத்து, அவரை பாராட்டும் விதமாக ரகு நாயக்கிற்கு அவரது வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ரூ.500 வழங்க அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் உத்தரவிட்டார்.
அதன்படி அவர் உயிருடன் இருக்கும் வரை அந்த உதவித்தொகை பெற்று வந்தார். கடந்த 1983 ஆம் ஆண்டு ரகுநாயக் உயிரிழந்தார். இதன் பின்னர் சில வருடங்களில் அவரது மகனும் இறந்துவிட்டார்.
ரகுநாயக் இறந்து 33 வருடமாக அவரது மனைவி மண்டோதரி நாயக் தனது மகளுடன் வசித்து வருகிறார். தோட்ட வேலை பார்த்து வரும் மண்டோதரி வறுமை காரணமாக மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.
இதனையறிந்த ஒடிசா மாநில அரசு ரகு நாயக்கின் மனைவி மண்டோதரி நாயக்கை தலைமைச் செயலகத்துக்கு வரவழைத்து அவருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவிக்கான காசோலையை மண்டோதரி நாயக்கிடம் முதல்வர் நவீன் பட்நாயக் வழங்கினார். அவருக்கு சால்வை போர்த்தியும் கெளவுரவப்படுத்தினார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications