ஒடிசா சாலை விபத்து: பஸ் கவிழ்ந்து 9 கபடி வீரர்கள் பலி
புவனேஸ்வர்: ஒடிசாவில் கபடி வீரர்கள் சென்ற பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள சந்தர்கர் மாவட்டம் பாரி பகுதியில் நேற்று இரவு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் கபடி வீரர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். திருப்பத்தில் பேருந்து வளைய முயன்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 7 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இரண்டு பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
9 பேர் உயிரிழந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போட்டியில் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த கபடி வீரர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒடிசாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications