நான் ரயிலில் ஏறிவிட்டேன்.. கடைசியாக அவர் பேசியது இதுதான்.. ஒடிஸா விபத்தில் இறந்தவரின் மனைவி கண்ணீர்
புவனேஸ்வரம்: யஸ்வந்த்பூர் ரயிலில் ஏறிவிட்டேன் என அவர் கடைசியாக என்னிடம் பேசினார் என விபத்தில் இறந்தவரின் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகிவிட்டனர். சுமார் 900 பேர் காயமடைந்தனர். இந்த மீட்பு பணிகள் மேலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த பிரதமர் நரேந்திர மோடி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். கவலை தோய்ந்த முகத்துடன் அவர் விபத்து குறித்து கேட்டறிந்தார். மேலும் விபத்து நடக்க காரணமாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த விபத்தில் 17 பெட்டிகள் தடம் புரண்டன.
கோரமண்டல் எக்ஸ்பிரஸும் யஷ்வந்த்பூர் விரைவு ரயிலும் அதி வேகத்தில் வந்ததே இத்தனை உயிரிழப்பு ஏற்பட காரணம் என சொல்லப்படுகிறது. உயரமான இடத்தில் இருந்து யாராவது பொம்மைகளை தூக்கி எறிந்தால் எப்படி இருக்குமோ அப்படியிருக்கிறது விபத்து நடந்த இடம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தண்டவாளத்தில் ஆங்காங்கே உடல் பாகங்களும் ரத்தக் கறைகளும் சிதைந்த உடல்களும் இருந்தன.
தடம்புரண்ட பெட்டிகளை பெரிய கிரேன் மூலம் அகற்றும் பணிகள் நடக்கின்றன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் 4 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில் அதி வேகமான வேகத்தில் ரயில்கள் இயங்கியதே இந்த விபத்துக்கு காரணம். ஒரு பெரிய சப்தம் கேட்டத. அதன் பின்னர் நான் மேல் பெர்த்தில் இருந்து தரையில் விழுந்தேன்.
நிறைய பேர் காயங்களுன் கீழே விழுந்திருந்தனர் என்றார். அதுபோல் பெங்களூரில் பணியாற்றும் தச்சர் ஒருவர் கூறுகையில் எனக்கு மார்பு, பாதம், தலையில் அடிபட்டுள்ளது. நாங்கள் ஜன்னல் கதவுகளை திறக்க முயற்சித்தோம். ஆனாலும் கதவுகளை திறக்க முடியவில்லை. முன்பதிவு செய்யப்படாத ஜெனரல் கம்பார்ட்மென்ட்களில் நிறைய புலம்பெயர் தொழிலாளர்கள் சிக்கியிருந்தனர்.
இந்த ஜெனரல் பெட்டிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டன என்றார். அது போல் 30 வயது மதிப்பிலான ஒருவர் தனது மனைவிக்கு போன் செய்து தான் ஹவுரா மாவட்டத்தில் ஷாலிமர் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிவிட்டேன் என்றார். அதுதான் அவர் கடைசியாக பேசியது என அவரது மனைவி தெரிவித்தார். இன்னும் சிலர் இந்த விபத்து நடந்ததும் மயக்க நிலைக்கு சென்றுவிட்டதாகவும் கண் விழித்ததும்தான் இத்தனை பெரிய கோர விபத்து நடந்ததும் தெரியவந்ததாக தெரிவித்தனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications