ஒடிஷாவில் மாவோயிஸ்டுகளுக்கு பெரும் பின்னடைவு.. பழங்குடி இனத் தலைவர் சரணடைய முடிவு!!
கோராபுட்: ஒடிஷா மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக இருந்த பழங்குடி இனத் தலைவர் தற்போது ஆயுதங்களை கைவிட்டு சரணடைய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒடிஷா மாநிலத்தில் கோராபுட் மாவட்டம் நாராயண்பட்னாதான் மாவோயிஸ்டுகளின் முக்கிய கோட்டை. இங்கு சாஷி முலியா ஆதிவாசி சங்கம் என்ற அமைப்பு நாசிகா லிங்கா தலைமையில் செயல்பட்டு வருகிறது.
இந்த உள்ளூர் ஆயுதம் தாங்கிய குழுதான் மாவோயிஸ்டுகளுக்கு பக்க பலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நாசிகா லிங்காவின் அமைப்பைச் சேர்ந்த 12 பேர் கோராபுட் போலீசில் சரணடைந்துள்ளனர்.

தாங்கள் மாவோயிஸ்டுகளுக்கான கூட்டங்கங்களை ஒருங்கிணைத்தவர்கள் என்று கூறி போலீசில் 12 பேரும் சரணடைந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 33 பேர் இதுவரை சரணடைந்திருக்கின்றனர்.
நாசிகா லிங்காவையும் சரணடைய வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பழங்குடி இனத்தவருக்கு நில உரிமை வழங்க வேண்டும்; முழுமையான மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற நாசிகா லிங்காவின் கோரிக்கைகளை அரசும் ஏற்க முன்வந்திருக்கிறதாக கூறப்படுகிறது.
இதனால் விரைவில் நாசிகா லிங்காவும் சரணடையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி அவர் சரணடைந்தால் ஒடிஷாவில் மாவோயிஸ்டுகளுக்கு அது பெரும் பின்னடைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications