துவங்கிய வேகத்தில் பைக் டாக்சி சேவையை நிறுத்திய ஓலா?
பெங்களூர்: பெங்களூரில் பைக் டாக்சிகள் துவங்கி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அந்த சேவையை ஓலா நிறுவனம் நிறுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஓலா மற்றும் உபேர் ஆகிய டாக்சி நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை கடந்த வியாழக்கிழமை அறிமுகம் செய்து வைத்தன. இந்நிலையில் முறையான அனுமதி பெறாமல் டாக்சி சேவையை துவங்கியுள்ளதாகக் கூறி கர்நாடக அரசு ஓலா மற்றும் உபேர் பைக் டாக்சிகளை கடந்த சனிக்கிழமை பறிமுதல் செய்தது.

இது குறித்து கருத்து தெரிவிக்க ஓலா நிறுவன சிஓஓ பிரனய் ஜிவ்ராஜ்கா மறுத்துவிட்டார். இந்நிலையில் ஓலா ஆப்பில் பைக் டாக்சி சேவை இன்று காலையில் இருந்து வேலை செய்யவில்லை. ஆப்பில் அப்படி ஒரு சேவையே இல்லை.
இந்நிலையில் ஓலா நிறுவனம் பைக் டாக்சி சேவையை நிறுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது. அதே சமயம் உபேர் நிறுவனம் பைக் டாக்சிகளை இன்னும் இயக்கிக் கொண்டிருக்கிறது. பாங்காக்கை அடுத்து பெங்களூரில் தான் உபேர் மோட்டோ அதாவது உபேர் பைக் டாக்சிகள் இயக்கப்படுகின்றன.
உபேர் நிறுவனத்திற்கு போட்டியாக துவங்கப்பட்ட ஓலா பைக் டாக்சி சேவை திடீர் என நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications