காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் பரூக் அப்துல்லா மீது தேசத்துக்கு எதிராக பேசியதாலும் பிரிவினையை தூண்டியதாலும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. தற்போது ஜம்மு காஷ்மீர் சிறையில் முன்னாள் முதல்வர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
6 மாதங்களுக்கும் மேலாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, காஷ்மீரில் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பிரிவினைவாதத்தை தூண்டுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் காஷ்மீர் சிறையில் இருக்கும் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் மீது பொதுபாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவரை எந்த வித விசாரணையுமே இல்லாமல் 3 மாதங்கள் வரை சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications